search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புனித சூசையப்பர்"

    • 6-ந்தேதி தேர்பவனி நடைபெறுகிறது.
    • 7-ந்தேதி கொடியிறக்கம் நடக்கிறது.

    வட்டக்கரை புனித சூசையப்பர் ஆலய திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளான நாளை மாலை 6 மணிக்கு ஜெபமாலை, 6.30 மணிக்கு மறைமாவட்ட முதன்மை பணியாளர் அருட்பணி கில்லாரியுஸ் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றிவைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார். புதூர் பங்குதந்தை சாம் மேத்யூ மறையுரையாற்றுகிறார்.

    விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, 6.30 மணிக்கு திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவில் 30-ந்தேதி காலை 7 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார். மாலை 5.30 மணிக்கு நற்கருணை பவனி ஊர்சுற்றி பவனி வருதல் ஆகியவை நடக்கிறது.

    விழாவில் வருகிற 6-ந்தேதி ஆயர் இல்லம் இறையியல் பேராசிரியர் அருட்பணி அல்போன்ஸ் தலைமை தாங்கி முதல் திருவிருந்து திருப்பலியை நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார்.

    மாலை 6 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்கி நற்கருணை ஆசீர் நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து இரவு 9 மணிக்கு தேர்பவனி நடைபெறுகிறது.

    விழாவின் இறுதிநாளான 7-ந்தேதி காலை 7 மணிக்கு மறைமாவட்ட பொருளாளர் அருட்பணி அலோசியஸ் தலைமை தாங்கி திருவிழா திருப்பலியை நிறைவேற்றுகிறார். கன்னியாகுமரி வட்டார முதன்மை பணியாளர் அருட்பணி ஜாண்சன் மறையுரையாற்றுகிறார். மாலை 4 மணிக்கு தேர்பவனி, 5 மணிக்கு நற்கருணை ஆசீர், கொடியிறக்கம் ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடு களை பங்குதந்தை, பங்குபேரவை, அருட்சகோதரிகள், பங்குமக்கள் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • இந்த விழா மே 7-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    • 6-ந்தேதி புனிதரின் தேர்ப்பவனி நடக்கிறது.

    பிள்ளைத்தோப்பில் புனித சூசையப்பர் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (மே) 7-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    நாளை மாலை 6.30 மணிக்கு கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் கொடியேற்றமும், அதைத்தொடர்ந்து திருவிழா திருப்பலியும் நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலையில் ஜெபமாலை, திருப்பலி, கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    மே 1-ந் தேதி காலை புனித சூசையப்பர் தினத்தை முன்னிட்டு நடைபெறும் திருப்பலியை தொடர்ந்து அன்பு விருந்து நடக்கிறது. அன்று மாலை மாவட்ட அளவிலான நடன போட்டியும் நடைபெறுகிறது.

    3-ந்தேதி மாலை 6.30 மணிக்கு பிள்ளைத்தோப்பு மண்ணின் மைந்தரும், கோவை மறைமாவட்ட ஆயருமான தாமஸ் அக்வினாஸ் தலைமையில் திருப்பலி நடக்கிறது. அதைத் தொடர்ந்து முப்பெரும் விழா மலர் வெளியீட்டு விழாவும், பங்கு வரலாறு ஆவணப்படமும் திரையிடப்படுகிறது.

    6-ந் தேதி காலை 10 மணிக்கு கண் மற்றும் உடல் உறுப்பு தானவிழிப்புணர்வு முகாம் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு ஆராதனையைத் தொடர்ந்து புனிதரின் தேர்ப்பவனி நடக்கிறது.

    7-ந் தேதி காலை 7.15 மணிக்கு கோட்டாறு மறை மாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் பெருவிழா சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது.

    திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜெகன் தலைமையில் பங்கு பேரவை நிர்வாகிகள், பங்கு அருட்பணி பேரவையினர் மற்றும் பங்கு மக்கள் இணைந்து செய்து வருகிறார்கள்.

    • 21-ந் தேதி முதல் 23-ந்தேதி வரை புது நன்மை தினம் கடை பிடிக்கப்படும்.
    • 30-ந் தேதி கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெரும்.

    சென்னை எண்ணூர் கத்திவாக்கம் சாலையில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்தில் ஆண்டு பெரு விழா நாளை (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோனி விழாவுக்கு தலைமை தாங்குகிறார். கொடி ஏற்றத்தை தொடர்ந்து நவநாள் ஜெபம் திருப்பலி நடைபெறும்.

    மறுநாள் 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை மாலை 6 மணிக்கு புது நன்மை தினம் கடை பிடிக்கப்படும். 24-ந்தேதி குழந்தைகள் தினம், 25ந்தேதி இளையோர் தினம் நடத்தப்படும்.

    26-ந்தேதி தம்பதியர் தினம், 27-ந் தேதி முதியோர் தினம் கொண்டாடப்படும். 28-ந் தேதி நற்கருனை தினம் நடைபெ றுகிறது. 29-ந் தேதி ஆடம்பர தேர் திருவிழா நடத்தப்பட உள்ளது. 30-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பங்கு பெருவிழாவும், திருவிழா திருப்பலியும் மேற்கொள்ளப்படும். அன்று மாலை 6 மணிக்கு கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெரும். விழா நாட்களில் மாலை நேரத்தில் குணமளிக்கும் சிறப்பு திருப்பலி மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    அதற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை ஜாக்கப் ஆல்பர்ட் மற்றும் அருட் தந்தையர்கள், அருட் சகோ தரிகள், பங்கு மக்கள் செய்து உள்ளனர்.

    • இன்று (19-ந்தேதி) சூசையப்பர் தினம் கொண்டாடப்படுகிறது.
    • புனித சூசையப்பர் தின சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனைகள் நடக்கும்.

    உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று (19-ந்தேதி) சூசையப்பர் தினம் கொண்டாடப்படுகிறது. மரியாளின் கணவரான சூசையப்பர் தச்சு தொழில் செய்து வந்தார்.

    இதனால் தொழிலாளர் தினமான மே 1-ந்தேதியும் அவருக்கு விழா எடுக்கப்படும்.என்றாலும் மார்ச் 19-ந்தேதிதான் சூசையப்பர் விழா அனைத்து ஆலயங்களிலும் கொண்டாடப்படும்.

    அன்று சூசையப்பரை பாதுகாவலராக கொண்ட ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் நற்கருணை ஆராதனை நடை பெறும். இது போல மற்ற ஆலயங்களில் இன்று புனித சூசையப்பர் தின சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனைகள் நடக்கும்.

    • விழாவில் அன்பின் விருந்து வழங்கப்பட்டது.
    • விழாவில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    தக்கலை அருகில் உள்ள மணலிக்கரையில் புனித சூசையப்பர் புதிய ஆலயம் அர்ச்சிப்பு விழா நடந் தது. நிகழ்ச்சியின் தொடக்க நிகழ்ச்சியாக சிறப்பு விருந்தினர்களுக்கு பங்குதந்தை மரிய டேவிட் தலைமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து நடந்த அர்ச்சிப்பு விழாவில் கார்மல் சபையின் தமிழ்நாடு மறை மாநிலத் தலைவர் நேசமணி, குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் அருட்பணியாளர் ஏசு ரெத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய ஆலயத்தை பாளையம்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் அர்ச்சித்து திறந்து வைத்தார்.

    தொடர்ந்து அவர் ஆலய பீடம், நற்கருணை பேளை போன்றவற்றை அர்ச்சித்து திருப்பலியை தலைமை ஏற்று நிறைவேற்றினார்.

    மார்த்தாண்டம் மலங்கரை கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் மறையுரையாற்றினார். முடிவில் பங்குதந்தை மரிய டேவிட் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை இணைபங்குதந்தை குமார் தொகுத்து வழங்கினார்.

    விழாவில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர், விழாவில் அன்பின் விருந்து வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் பங்குதந்தை தலைமையில் செய்யப்பட்டிருந்தது.

    • அர்ச்சிப்பு விழா இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது.
    • ஆலய பங்கு பணியாளர் மரிய டேவிட் தலைமை தாங்குகிறார்.

    தக்கலைக்கு அருகில் உள்ள மணலிக்கரையில் 1912-ம் ஆண்டு கொல்லம் மறை மாவட்டத்தின் ஆயராக அலோசியஸ் மரிய பென்சிகர் இருந்த போது புனித சூசையப்பர் ஆலயம் சிறிய அளவில் கட்டப்பட்டது, இந்த ஆலயத்தில் 1918-ல் முதல் பங்குப் பணியாளராக தனிஸ்லாஸ் பணியாற்றினார்.

    அதன்பிறகு 1963-1969 காலகட்டத்தில் பங்கு பணியாளராக ஜெரோம் இருந்த போது ஆலயம் பெரிதாக கட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து 2018 -ம் ஆண்டு பங்கு பணியாளராக இருந்த கிறிஸ்துதாஸ் பங்குமக்களின் ஒத்துழைப்புடன் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலயத்தை, புதிய ஆலயமாக கட்டுவதற்கான பணிகளை தொடங்கினார்.

    இந்த நிலையில் 2020-ல் பங்கு பணியாளராக பொறுப்பேற்ற மரிய டேவிட் தலைமையில் ஆலயப்பணி வேகமாக நடந்து, புதிய புனித சூசையப்பர் ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது, இந்த ஆலயம் மணலிக்கரை ஆர்.சி.தெரு, மணக்காவிளை, மாவறவிளை, ஆற்றுக்கோணம் ஆகிய நான்கு ஊர்களை உள்ளடக்கி, சுவாமியார் மடம், கல்லங்குழி, முகிலன்கரை, சோலாபுரம், பெருஞ்சிலம்பு, குமாரபுரம் ஆகிய ஆறு கிளை பங்குகளோடு செயல்படுகிறது.

    புதிய புனித சூசையப்பர் ஆலயத்தின் அர்ச்சிப்பு விழா இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது.

    இதற்கு ஆலய பங்கு பணியாளர் மரிய டேவிட் தலைமை தாங்குகிறார், பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற ஆயர் ஜுடு பால்ராஜ் புதிய ஆலயத்தை அர்ச்சித்து திருப்பலியை நிறைவேற்றி ஆலயம் மற்றும் பீடத்தையும் அர்ச்சிக்கிறார்.

    மார்த்தாண்டம் சீரோ மலங்கரை மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் கலந்து கொண்டு அருளுரையாற்றுகிறார்.

    சிறப்பு விருந்தினர்களாக கார்மல் சபையின் தமிழ்நாடு மறைமாநிலத் தலைவர் நேசமணி, குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் இயேசு ரெத்தினம் மற்றும் பங்குப் பணியாளர்கள், பங்குமக்கள், அருள்சகோதரிகள், பங்கு பேரவையினர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.

    விழா ஏற்பாடுகளை பங்கு பணியாளர் மரிய டேவிட் தலைமையில் விழாக்கமிட்டி நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    தேர் பவனியை அருட்தந்தை ஜார்ஜ் புனித நீரை கொண்டு மந்தரித்து தொடங்கி வைத்தார். இந்த தேர் பவனி பெரிய ஏரிக்கோடி கிராமங்கள் வழியாக வந்தது.
    கிருஷ்ணகிரி அருகே பெரிய ஏரிக்கோடியில் உள்ள புனித சூசையப்பர் ஆலய தேர்த்திருவிழா கடந்த 20-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் செபமாலை, நவநாள் செபம், கூட்டு திருப்பலி உள்ளிட்ட பூஜைகள் நிறைவேற்றப்பட்டன. நேற்று முன்தினம் இரவு புனித சூசையப்பர் ஆலயத்தில் தேர் பவனி நடைபெற்றது.

    முன்னதாக, கோவை நல்லாயன் குருத்துவக்கல்லூரி பேராசிரியர் அந்தோணி மதலைமுத்து தலைமையில், ஆடம்பர கூட்டு திருப்பலி, நற்கருணை ஆராதனை மற்றும் திவ்ய நற்கருணை ஆசீர்வாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், புனித சூசையப்பர் தேர்பவனி நடைபெற்றது.

    தேர் பவனியை அருட்தந்தை ஜார்ஜ் புனித நீரை கொண்டு மந்தரித்து தொடங்கி வைத்தார். இந்த தேர் பவனி பெரிய ஏரிக்கோடி கிராமங்கள் வழியாக வந்தது. தேர்த்திருவிழாவில், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு, தேரின் மீது உப்பு, மிளகு ஆகியவற்றை தூவினர்.
    பிரசித்தி பெற்ற எண்ணூர் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்தின் தேர் திருவிழா நடைபெற்றது. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு மாதா பாடல்கள் பாடியபடி தேரை இழுத்துச் சென்றனர்.
    எண்ணூரில் உள்ள புனித சூசையப்பர் ஆலயம் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் மே மாதம் 10 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்தது.

    முன்னதாக தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சவேரியர், அந்தோணியார், ஆரோக்கியமாதா, சூசையப்பர் ஆகியோரின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவச்சிலைகள் (சொரூபங்கள்) தனித்தனி தேர்களில் வைத்து பவனியாக எடுத்து வரப்பட்டது.

    பவனியானது கோவில் வளாகத்தில் தொடங்கி கத்திவாக்கம் நெடுஞ்சாலையில், அண்ணா நகர் வரை உள்ள பகுதிகளில் வலம் வந்தன. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு மாதா பாடல்கள் பாடியபடி தேரை இழுத்துச் சென்றனர்.
    செந்துறை புனித சூசையப்பர் ஆலயத்தின் 126-வது திருவிழா 4 நாட்கள் நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட மின்ரதத்தில் புனிதர்களின் தேர் பவனி நடைபெற்றது.
    செந்துறை புனித சூசையப்பர் ஆலயத்தின் 126-வது திருவிழா 4 நாட்கள் நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட மின்ரதத்தில் புனிதர்களின் தேர் பவனி நடைபெற்றது. ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேர் பவனி நேதாஜி நகர், பாத்திமா நகர், சந்தைப்பேட்டை, குரும்பபட்டி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. தேர்களில் வலம் வந்த புனிதர்கள் சொரூபங்களின் காலடியில் தாய்மார்கள் தங்களது குழந்தைகளை வைத்து எடுத்தனர். பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், உப்பு, மிளகு, பொரி, வாழைப்பழம், நுங்கு ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தியும் வழிபட்டனர்.

    மேலும் நாட்டில் விவசாயம் செழிக்கவும், பருவமழை தவறாமல் பெய்யவும், அமைதி, சமாதானம் நிலவவும் வழிபாடு நடத்தப்பட்டது. தேர் பவனியையொட்டி வாணவேடிக்கை, பொய்க்கால் குதிரையாட்டம், தேவராட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் ஆகியவை நடந்தது. இதில் செந்துறை மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
    நாகர்கோவில் வட்டக்கரை புனித சூசையப்பர் ஆலய திருவிழா நேற்று கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    நாகர்கோவில் வட்டக்கரை புனித சூசையப்பர் ஆலய திருவிழா நேற்று கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா அடுத்த மாதம் (மே) 5-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. அதனை தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது.

    தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். 28-ந் தேதி காலை 6.30 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு நற்கருணை பவனியும் நடக்கிறது. வருகிற 1-ந் தேதி மாலை 6.30 மணிக்கு திருப்பலியை தொடர்ந்து சமபந்தி விருந்து நடக்கிறது.

    4-ந் தேதி காலை 6.30 மணிக்கு முதல்திருவிருந்து திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர், இரவு 8.30 மணிக்கு தேர் பவனி போன்றவை நடைபெறும். நற்கருணை ஆசீர் நிகழ்ச்சியில் மறைமாவட்ட செயலாளர் அருட்பணியாளர் இம்மானுவேல் தலைமை தாங்குகிறார்.

    விழாவின் இறுதி நாளான 5-ந் தேதி காலை 7.30 மணிக்கு அருட்பணியாளர் ஜெரேமியாஸ் தலைமையில் திருவிழா திருப்பலி, மாலை 4 மணிக்கு தேர் பவனி, 5 மணிக்கு நற்கருணை ஆசீர் போன்றவை நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர். 
    நாகர்கோவில், வட்டக்கரை புனித சூசையப்பர் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில், வட்டக்கரை புனித சூசையப்பர் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (மே) 5-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 6 மணிக்கு ஜெபமாலை, 6.30 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி போன்றவை நடக்கிறது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரை நிகழ்த்துகிறார்.

    தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். 28-ந் தேதி காலை 6.30 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு நற்கருணை பவனியும் நடக்கிறது. வருகிற 1-ந் தேதி மாலை 6.30 மணிக்கு திருப்பலியை தொடர்ந்து சமபந்தி விருந்து நடக்கிறது.

    4-ந் தேதி காலை 6.30 மணிக்கு முதல்திருவிருந்து திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர், இரவு 8.30 மணிக்கு தேர் பவனி போன்றவை நடைபெறும். நற்கருணை ஆசீர் நிகழ்ச்சியில் மறைமாவட்ட செயலாளர் அருட்பணியாளர் இம்மானுவேல் தலைமை தாங்குகிறார்.

    விழாவின் இறுதி நாளான 5-ந் தேதி காலை 7.30 மணிக்கு அருட்பணியாளர் ஜெரேமியாஸ் தலைமையில் திருவிழா திருப்பலி, மாலை 4 மணிக்கு தேர் பவனி, 5 மணிக்கு நற்கருணை ஆசீர் போன்றவை நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
    சேலம் சன்னியாசிகுண்டு பகுதியில் புனித சூசையப்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    சேலம் சன்னியாசிகுண்டு பகுதியில் புனித சூசையப்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா கொடியை சூரமங்கலம் திருஇருதய ஆண்டவர் ஆலய பங்கு தந்தை அருளப்பன் ஏற்றி வைத்தார்.

    விழாவை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 30-ந்தேதி வரை தினமும் சிறுதேர் பவனி மற்றும் திருப்பலி ஆகியவை நடக்கிறது. மே மாதம் 1-ந்தேதி காலை 8 மணிக்கு சேலம் மறைமாவட்ட ஆயர் சிங்கராயன் தலைமையில் நற்கருணையும், மாலை 6.30 மணிக்கு சிறப்பு திருப்பலியும், இரவு 9 மணிக்கு கொடியிறக்கமும் நடக்கிறது.
    ×